தமிழ்நாட்டின் வரலாற்றில் யாருக்கும் உரித்தாகாத ஒரு தனி இடத்தைப் பெற்ற பெருமைக்குரியவர் நமது அருமைத் தந்தை பெரியார் அவர்கள்.
துள்ளிக் குதிக்கும் இளமைப் பருவம் முதல் எழுந்து நடக்கவே தள்ளாடும் முதுமை வரை, தாம் கண்டதையும் கேட்டதையும் கருத்தில்கொண்டு, ஆராய்ந்து நோக்கி அவற்றின் நியாய – அநிநாயங்களைப் பகுத்தறிந்து உணர்ந்து, உண்மை கண்டு, அதனை உலகோர்க்கு உணர்த்துவதையே தமது கடமையாகக் கொண்டார்.
அவர் இளமையில் பயின்ற ஏட்டுக் கல்வி குறைவுதான் எனினும் – தாமாகப் படிக்கக்கூடிய ஏடுகள் பலவற்றையும் படித்து, அவற்றையும் தமது அறிவுகொண்டு ஆராய்ந்து, அவற்றின் நன்மையும் தீமையும் தெளிந்து மக்களுக்கு விளக்கி உரைத்தார்.
எப்படிப்பட்ட பெருமைக்குரியவர் கூறியதாயினும்- எவ்வளவு போற்றப்படும் ஏட்டில் கண்டதாயினும்- தமது அறிவுக்குச் சரியென்று தோன்றாத எதனையும் ஏற்க மறுத்தார் என்பது மட்டுமன்றி, எதிர்க்கவும் – கண்டிக்கவும் பின்வாங்கவில்லை.
எதுவானாலும் – அது ஏன்? எதற்காக? எப்படி? என்ன பயன்? என்னும் கேள்விக்கு அவற்றை இலக்காக்கினார்.
மனித வாழ்வு – அறிவை அடிப்படையாக்க்கொண்டே நாளும் வளர்ச்சி பெறுவது. ஆதி நாள்களில் மனிதன் எத்தனையோ துன்பங்களுக்கிடையில், உயர்க் கேடுகளுக்கிடையில், தனது அறிவைப் பயன்படுத்தி, உயிரைக் காத்துக்கொண்டு முன்னேற்றம் கண்டான். அந்த அறிவு வளர்ந்து – விரிந்து பல துறைகளில் பயின்று, ஆழ்ந்து நுணுகி ஆராயும் திறம் பெற்று, மனித வாழ்வை மேலும் மேலும் மேம்பாடு அடையச் செய்து வந்துள்ளது.
vijay ananth
hi, i am vijay ananth. my native kilapavoor (tirunelveli dist). i am intrest in periyar aim. i love periyar. thank u.
ganesh
i love periyar
nagaraj
HI IAM NAGARAJ FROM CHENNAI. E.V.R VERIYANIL ORUVAN,,,,,,,,,
sathish
Dear Friends,
In tamil nadu with out born Thanthai periyar Tamils were dont know self respect. Now we are wearing good dress, got good education, having cleanness, all are from Periyar. Our nation will reach once a day his dreams ” caste less society “
kasi
Periyar Pondra Oru Makathana Thalaivarai, Ini Intha Ulagam
Paarka Povathillai. Periyar Pirantha Mannil Vazhvathu Mikavum
Magizhchiyalikkirathu. Periyarin Pugazh Oonguka !