திராவிடர் கழகம் கண்டார்
கடவுள் மறுப்புக் கொள்கையில் கடுகளவும் மாறாது கடமை ஆற்றியர் பெரியார். அதேபோல் பிராமணர்கள் எதிர்ப்புப் போராட்டத்தையும் எந்த நிலையிலும் கைவிடதவர். பிராமணர்கள் அடையும் சமுதாய முன்னுரிமையை பிராமணர் அல்லாதாரும் மற்றும் பின்தங்கிய வகுப்பாரும் அடைய வேண்டும் என்பதே அவர் இலட்சியமாய் இருந்தது. தன் வாழ்நாளின் இறுதிமூச்சுவரை அதற்காகவே பாடுபட்டார் பெரியார்.