திராவிடர் கழகம் கண்டார்

posted in: leadership, politics | 0

கடவுள் மறுப்புக் கொள்கையில் கடுகளவும் மாறாது கடமை ஆற்றியர் பெரியார். அதேபோல் பிராமணர்கள் எதிர்ப்புப் போராட்டத்தையும் எந்த நிலையிலும் கைவிடதவர். பிராமணர்கள் அடையும் சமுதாய முன்னுரிமையை பிராமணர் அல்லாதாரும் மற்றும் பின்தங்கிய வகுப்பாரும் அடைய வேண்டும் என்பதே அவர் இலட்சியமாய் இருந்தது. தன் வாழ்நாளின் இறுதிமூச்சுவரை அதற்காகவே பாடுபட்டார் பெரியார்.

காங்கிரஸ் கட்சியில் பெரியார்

posted in: leadership, politics | 1

இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட நெடிய வரலாற்றை உடையது. முதல் இந்தியச் சுதந்திரப் போர் 1857 இல் தொடங்கியது. அது படிப்படியாக வேகம் எடுத்தது. வீரர்கள் அடிமை விலங்கை ஒடிப்பதற்காக துடிப்புடன் செயல்பட்டார்கள். துன்பங்களைத் தாங்கிக்கொண்டார்கள். நாய்நாட்டிற்காக இன்னுயிரை நீக்கவும் தயாராயிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையும் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. இந்தச் சூழ்நிலையில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா … Continued

மக்களைத் தேடி சென்ற முதல் தலைவர்!

posted in: leadership, politics | 1

பெரியார் அவர்களின் அறிவுக் கூர்மையானது; சுறுசுறப்பானது; நினைவாற்றல் மிக்கது; ஓய்வை ஏற்காதது; எப்பொழுதும் எதையாவது படித்துக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ தான் இருப்பார். புதிது புதிதாக அறியக் கூடியவற்றை அறிந்து – தெளிவதிலே அவருக்குப் பேரார்வம்.