பகுத்தறிவால் மாற்றியவர்

posted in: lessons, Untouchability | 1

நீண்ட பல ஆண்டுகளாக மனிதன் உள்ளத்தில் தொடர்ந்து பதிந்துள்ள, பழக்கமாகிவிட்ட நம்பிக்கைகள்- நினைப்புகள், சமயவழி எண்ணங்கள், சாத்திர புராணக் கருத்துகள் அனைத்தும் ஒரு மனிதனைச் சிலந்தி வலையில் சிக்கிய சிறுபூச்சியின் நிலையிலேயே சிக்கிச் செயலற வைத்திருக்கும் என்பதும், அதிலிருந்து அவனை மீட்பது எளிதன்று என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரியும். இதுகாறும் ஒருவகைச் சமய நம்பிக்கையை – … Continued

மனித வாழ்வும் அறிவும்

posted in: admire, lessons | 5

தமிழ்நாட்டின் வரலாற்றில் யாருக்கும் உரித்தாகாத ஒரு தனி இடத்தைப் பெற்ற பெருமைக்குரியவர் நமது அருமைத் தந்தை பெரியார் அவர்கள். துள்ளிக் குதிக்கும் இளமைப் பருவம் முதல் எழுந்து நடக்கவே தள்ளாடும் முதுமை வரை, தாம் கண்டதையும் கேட்டதையும் கருத்தில்கொண்டு, ஆராய்ந்து நோக்கி அவற்றின் நியாய – அநிநாயங்களைப் பகுத்தறிந்து உணர்ந்து, உண்மை கண்டு, அதனை உலகோர்க்கு … Continued

தன்மான உணர்வூட்டியவர்

posted in: admire, education, lessons | 3

தந்தை பெரியார் அவர்கள் தோன்றியிராவிட்டால், அவரது சுயமரியாதை முழக்கம் கேட்காமலிருந்தால், பேரறிஞர் அண்ணா அவர்கள் இல்லை; அவரது வழிகாட்டுதலும், அறிவுத் தொண்டும், அரசியல் பணியும் நமக்குக் கிடைத்திருக்காது.

கருத்து வேற்றுமையை மதித்தவர்

posted in: admire, lessons | 0

மக்கள் பலர் தமது கருத்தினைக் காது கொடுத்துக் கேட்கிறார்கள் என்பதே அவரது களைப்புக்கு மருந்து. அவர்கள் தமது கொள்கையைச் சிந்திக்கின்றார்கள் – ஏற்க முற்படுகிறார்கள் என்பதே அவருக்குத தேன். அதுவே அவரது முதுமையில் அவர் பருகிய இளமையின் பால்.

அனுபவ அறிவு

posted in: education, lessons | 0

செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போன்று, எண்ணங்களும் மனப்பழக்கமாவதால், அந்த எண்ணங்களினின்றும் புதிய எண்ணங்களைச் சிந்திப்பது என்பது இயற்கையில் எளிதல்ல. பாடங்கேட்டுப் பழகாத அவரது மனம் புதிதாகத் தோன்றக் கூடிய எண்ணங்களைப் பழைய எண்ணங்கட்கு அடிமைப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆட்படவில்லை.