பார்ப்பன ஆதிக்கத்தை மட்டுமே பெரியார் கண்டிக்கவில்லை. சைவ சமய ஆதிக்கத்தையோ, வைணவ சமய ஆதிக்கத்தையோ தமிழர்களான மடாதிபதிகளின் ஆதிக்கத்தையோ பெரியாரவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
திருக்கோயில் பெயரால் உருவாக்கப்பட்டு நடைபெறும் ஆண்டவன் ஆதிக்கத்தைக்கூட கொள்கை நோக்கிப் பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை.
தொழில், வாணிக, ஆலை முதலாளித்துவ முறையின் ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜமீன்தார், இனாம்தார், மிட்டா மிராசுகளின் பரம்பரை ஆதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தெளிவாக்க் கூறுவதானால், எந்த ஓர் அரசாங்கத்தினுடைய ஆதிக்கத்தையுங்கூடப் பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின் பிராமணர்களுக்கு மட்டும் பெரியாரவர்கள் எப்படிப்பட்ட நியாயயம் வழங்குமுடியும் என்று நினைக்கிறீர்கள்? எதிர்பார்க்கிறீர்கள்?
Leave a Reply