தமிழினத் தந்தை!

posted in: leadership | 0

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ஈரோடு நகரில் பிறந்து வளர்ந்த (பெரியார்) ஈ.வெ. இராமசாமி அவர்கள் இன்று தமிழ் நாட்டு மக்களின் வாழ்விலும் எண்ணத்திலும் ஒரு புதிய விழிப்புணர்வையும் மாற்றத்தையும் உருவாக்கி, அறிவுப் புரட்சிக்கு வழிவகுத்து, மக்கள் தன்னம்பிக்கை கள்ளச் செய்தவராக விளங்குவதால், வரலாற்றில் போற்றிக் குறிப்பிட வேண்டிய ஒரு புதிய சகாப்தம் (புதிய நூற்றாண்டு) படைத்தவர் ஆவார். எனவே, பெரியார் அவர்களின் நூற்றாண்டு, தமிழர் வாழ்வு காண முற்பட்ட நூற்றாண்டாக, தன்மானமும், பகுத்தறிவும் முளைத்துத் தழைத்த நூற்றாண்டாக, தமிழ் நாடெங்கும் கொண்டாடப்படுவது எல்லா வகையிலும் இன்றியமையாத்தொரு எழுச்சியூட்டும் கடமையாகும்.

புதிய எழுச்சிக் கொண்ட தன்மான உணர்வும் பகுத்தறியும் மனப்பான்மையும் கொண்ட தமிழினத்தை உருவாக்கிய தந்தை பெரியார், புதிய தமிழகத்தின் – தமிழ் இனத்தின் தந்தையாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *