அனுபவ அறிவு

posted in: education, lessons | 0

செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போன்று, எண்ணங்களும் மனப்பழக்கமாவதால், அந்த எண்ணங்களினின்றும் புதிய எண்ணங்களைச் சிந்திப்பது என்பது இயற்கையில் எளிதல்ல. பாடங்கேட்டுப் பழகாத அவரது மனம் புதிதாகத் தோன்றக் கூடிய எண்ணங்களைப் பழைய எண்ணங்கட்கு அடிமைப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆட்படவில்லை.


ஏட்க் கல்வியை முறையாகப் பயில்வதில் நாட்டம் செலுத்தாவிடினும், அவரது இயல்பான அறிவுக் கூர்மையால், உலகம் என்னும் விரிந்த ஏட்டினைக் கண்டு, கேட்டு, உரையாடி, சிந்தித்து, தனிவழியில் தமது கருத்துகளை – காரண காரிய விளக்க அடிப்படையிலான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளலானார்.

பின்னர் மக்கள் ஏன், பல்வேறு மூட நம்பிக்கைகட்கு ஆளாகின்றனர்? சாதி, சமய வேற்றுமைகளை ஏற்கின்றனர்? என்றெல்லாம் சிந்திக்கத் தலைப்பட்டு, அவர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கைகொள்ள ஏதுவாக உள்ள இதிகாச புராண, சாத்திர ஏடுகளையும் அவராகவே படித்து அவற்றை ஆராயலானார். அவற்றில் அறிவுக்கு ஒவ்வாத, உண்மைக்கு மாறான கற்பனையும் பொய்யும் கலந்து மயக்க உணர்வு வளர்க்கும் பலப்பல செய்திகள் – கருத்துகள், இருப்பதைக் கண்டார். இந்தக் கற்பனைக் கதைகளும் – பொய்மைகளும் பாமர மக்களை மட்டுமின்றிப் படித்த மக்களையுங்கூட உண்மையைத் தெளியவிடாமல் தடுக்கின்றன என்பதையும் உணர்ந்தார். தாம் உணர்ந்த உண்மையை உலகத்திற்கு உணர்த்துவதே தமது வாழ்நாள் குறிக்கோளாக்க் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *