தந்தை பெரியார் அவர்கள் தோன்றியிராவிட்டால், அவரது சுயமரியாதை முழக்கம் கேட்காமலிருந்தால், பேரறிஞர் அண்ணா அவர்கள் இல்லை; அவரது வழிகாட்டுதலும், அறிவுத் தொண்டும், அரசியல் பணியும் நமக்குக் கிடைத்திருக்காது.
அறிஞர் அண்ணாவே இல்லை என்றால், அவரது தொண்டுக்கு வாய்ப்பு இல்லை என்றால், நான் ஏது? கலைஞர் கருணாநிதி ஏது? நண்பர் வீரமணிதான் ஏது?
பெரியார் தோன்றியிராமலிருந்தால், பெருந்தலைவர் காமராசரும், பச்சைத் தமிழர் என்னும் பாராட்டைப் பெற்றிருக்க மாட்டார். அவரது தலைமையும் நெடுநாள் நிலைத்திருக்க முடிந்திருக்காது.
பெரியாரின் பகுத்தறிவு எண்ணங்கள் தமிழகத்தில் பரப்பப்படாமலிருந்தால், சமயங்களிடையே சமரசம் கண்டு, சீர்திருத்தம் பேசிய தமிழ்ப்பெரியார் திரு.வி.க. அவர்கட்கு உரிய மதிப்பு வழங்கப்படும் நிலை உருவாகியிருக்காது. காவியுடை அணிந்து, சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் வலம்வரும் நிலை இருக்காது.
மறைமலை அடிகளாரை – அவரது தனித் தமிழ் உணர்வைப் போற்றி மதிக்கவும், நாவலர் சோமசுந்தர பாரதியாரை – அவரது சிந்தனையை எண்ணிப் போற்றவும் – தமிழ் வளர்த்த சான்றோரை ஏத்தவும் காரணமான தமிழ் உணர்வு மக்களிடம் வளர்ந்திருக்காது.
தேசிய கவி பாரதியார் கவிதையில் இடம்பெற்ற சமுதாய மாற்றக் கொள்கைகளும் வெளிபட்டிருக்காது. பாரதி வழியில் தோன்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் – தமிழியக்கக் கவிஞராகவும், பகுத்தறிவுப் பாவலராகவும் புரட்சிப் பண்பாடும் நிலை வடிவு பெற்றிருக்காது. தமிழ் உணர்வே வளர்ந்திருக்காது. ஏன்? தமிழனே இல்லை; தமிழகமே இல்லை என்னும் இருண்ட நிலைதான் இன்றுங்கூடத் தொடர்ந்திருக்கும்.
சுயமரியாதைக் கொள்கையோ, பகுத்தறிவு விளக்கமோ உருவாகி இருக்காது. தெளிவும் துணிவும் பிறந்திருக்காது. திராவிடர் கழகமோ – திராவிட முன்னேற்றக் கழகமோ இல்லாத நிலைதான்.
பெரியார் பிறந்தார் – வாழ்ந்தார் – வழிகாட்டினார். இந்த மண்ணில் பிறந்த நாமெல்லாம் வாழ்வு பெற்றோம். தன்மான உணர்வுடையவர்களானோம். தமிழர்களாகத் தலை நிமிர்ந்தோம்.
SENTHIL K
Such as nice and great man never born again….. vazhga periyar! vazhga periyar!!
yuvankumar M
WITHOUT PERIYAR…LIFE WILL BE LIKE ANIMALS…BEFORE THE CHEATING BRAHMINS……………
asaithambi
Thandhai periyar is tamil people’s “soovasa karttu”. we don’t for get it.