Latest Posts
குடி அரசு இதழ்களின் தொகுப்பு
தொகுப்பு முழுமையும் இந்த இணைப்பில் இருக்கிறது குடி அரசு இதழ்களின் தொகுப்பு வேண்டும் என இத்தனை பேர் கேட்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. பத்து அல்லது இருபது பேர் கேட்டால் அனைவருக்கும் அனுப்பி வைத்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். இப்பொழுது வரைக்கும் மட்டுமே நூற்றுக்கணக்கானவர்கள் கேட்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தொகுப்பை மின்னஞ்சலில் அனுப்புவது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்.
பெரியாரா?இராமசாமியா?
இன்று பெரியாரையும் அண்ணாவையும் ஆளாளுக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை விமர்சனம் என்று கூடச் சொல்ல முடியாது. வசை. பெரியாரின் ஏதாவது ஒரு வரியை எடுத்துக் கொண்டு ‘அப்படிச் சொன்னவன்தானே ராமசாமி?’ என்று எழுதுகிறார்கள். ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும். பெரியாரும் சரி; காந்தியும் சரி அல்லது அம்பேத்கரும் சரி- தங்களது செயல்பாட்டின் வழியாக … Continued
திராவிடர் கழகம் கண்டார்
கடவுள் மறுப்புக் கொள்கையில் கடுகளவும் மாறாது கடமை ஆற்றியர் பெரியார். அதேபோல் பிராமணர்கள் எதிர்ப்புப் போராட்டத்தையும் எந்த நிலையிலும் கைவிடதவர். பிராமணர்கள் அடையும் சமுதாய முன்னுரிமையை பிராமணர் அல்லாதாரும் மற்றும் பின்தங்கிய வகுப்பாரும் அடைய வேண்டும் என்பதே அவர் இலட்சியமாய் இருந்தது. தன் வாழ்நாளின் இறுதிமூச்சுவரை அதற்காகவே பாடுபட்டார் பெரியார்.
காங்கிரஸ் கட்சியில் பெரியார்
இந்திய விடுதலைப் போராட்டம் நீண்ட நெடிய வரலாற்றை உடையது. முதல் இந்தியச் சுதந்திரப் போர் 1857 இல் தொடங்கியது. அது படிப்படியாக வேகம் எடுத்தது. வீரர்கள் அடிமை விலங்கை ஒடிப்பதற்காக துடிப்புடன் செயல்பட்டார்கள். துன்பங்களைத் தாங்கிக்கொண்டார்கள். நாய்நாட்டிற்காக இன்னுயிரை நீக்கவும் தயாராயிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையும் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. இந்தச் சூழ்நிலையில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா … Continued
பகுத்தறிவால் மாற்றியவர்
நீண்ட பல ஆண்டுகளாக மனிதன் உள்ளத்தில் தொடர்ந்து பதிந்துள்ள, பழக்கமாகிவிட்ட நம்பிக்கைகள்- நினைப்புகள், சமயவழி எண்ணங்கள், சாத்திர புராணக் கருத்துகள் அனைத்தும் ஒரு மனிதனைச் சிலந்தி வலையில் சிக்கிய சிறுபூச்சியின் நிலையிலேயே சிக்கிச் செயலற வைத்திருக்கும் என்பதும், அதிலிருந்து அவனை மீட்பது எளிதன்று என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரியும். இதுகாறும் ஒருவகைச் சமய நம்பிக்கையை – … Continued
பெண்ணுரிமைக்கு ஒரு குரல்
பெண்ண்டிமை தீர்ந்தால்தான் – மக்கள் அடிமை மனப்பான்மை நீங்கும் என்று கண்ட பெரியார் – பெண்களுக்கு மட்டும் என அவர்களை அடக்கி – ஒடுக்கிக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக்க் கூறப்பட்ட கருத்துகளை -அதனோடு கலந்த கற்பனைகளை எல்லாம் கண்டிக்கலானார்.
சாதி ஒரு சூழ்ச்சிப் பொறி
”மனிதனை மனிதன் நெருங்க்க் கூடாது – காணக்கூடாது – தீண்டக்கூடாது” – என்கிறார்களே. யார் அவர்கள்? என்றார் பெரியார். ”மேல்சாதிக்கார்ர்கள்’ என்ற பதில் வந்தது. அப்படி மனிதனை மனிதன் இழிவுபடுத்த ஒரு மேல்சாதியா? அந்த மேல்சாதிக்கார்ன் வளர்க்கும் மாடுகளிலும் கீழோ மனிதன்? நாயினும் இழிந்தவனோ மனிதன்? அந்த மேல்சாதி ஒழிக என்றார். அவர்கள் மற்ற மனிதர்களை … Continued
மனித வாழ்வும் அறிவும்
தமிழ்நாட்டின் வரலாற்றில் யாருக்கும் உரித்தாகாத ஒரு தனி இடத்தைப் பெற்ற பெருமைக்குரியவர் நமது அருமைத் தந்தை பெரியார் அவர்கள். துள்ளிக் குதிக்கும் இளமைப் பருவம் முதல் எழுந்து நடக்கவே தள்ளாடும் முதுமை வரை, தாம் கண்டதையும் கேட்டதையும் கருத்தில்கொண்டு, ஆராய்ந்து நோக்கி அவற்றின் நியாய – அநிநாயங்களைப் பகுத்தறிந்து உணர்ந்து, உண்மை கண்டு, அதனை உலகோர்க்கு … Continued
அடிமைத்தனம் அழித்தல்
ஆரிய சூழ்ச்சி வலையினின்று விடுவிக்கத் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள். இங்கிலாந்து நாட்டிலே தோன்றிய புரட்சிக் கவிஞன் ஷெல்லி இங்கிலாந்து நாட்டு அடித்தட்டு உழைப்பாளி மக்களைக் கூவி அழைத்துக் கூறியது இது;
சமய வெறுப்பு ஏன்?
இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிருபர்கள் ஆர்வத்துடன் அகோபில மடாதிபதி ஜீயரைப் போய்ப பார்த்திருக்கிறார்கள். அவரைப் பார்த்துப் பேசியுள்ளனர், ஸ்ரீரங்கம் கோயில் திருப்பணிக்காகப் பலதரப்பட்டவர்களிடத்திலேயிருந்து நன்கொடை பெற்றிருக்கின்றீர்கள். அதிலே சைவர்கள், சைவ மடாதிபதிகள், பெரிய இலட்சாதிபதிகள் எல்லாம்கூட நிதி வழங்கியிருக்கின்றார்கள். நிதியைக்கொண்டு அரங்கநாதருடைய திருப்பணிக்கு – கோபுரப்பணிக்கு அந்தப் பணத்தை எல்லாம் செலவு செய்திருக்கின்றீர்கள் என்று … Continued